பூசலார் நாயனார் புராணம்
பூசலார் நாயனார் புராணம் "மன்னிய சீர் மறைநாவல் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்" அவதார தலம் - திருநின்றவூர் முக்திதலம் - திருநின்றவூர் குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி , அனுஷம் 05-11-13 செவ்வாய்க்கிழமை ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம்...