Posts

Showing posts from January, 2024

அகநானூறு - பாடல் 34. 

அகநானூறு - பாடல் 34.  முல்லைத் திணை  பாடியவர் - மதுரை மருதன் இள நாகனார் துறை - வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்கிறது. சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும்                                                                          புதல்  கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் தொடுதோல் கானவன் கவை பொறுத்து                                                                            அன்ன  இரு திரி மருப்பின் அண்ணல் இரலை 5 செறி இலைப் பதவின் செம் கோல் மென்                                          ...
  கலித்தொகை 51 – குறிஞ்சிக் கலி 15 - தலைவி கூற்று பாடியவர் – கபிலர் திணை - குறிஞ்சி சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில்நாம்ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!           5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,              10 அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா...

கலித்தொகை

  கலித்தொகை பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடல் எண் -       2 தலைவி ஆற்றாமை கூறி, செலவு அழுங்குவித்தது. 1   வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக், கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக், களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா, முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம் குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம் இறத்திரால்,  விளக்கவுரை : 1 வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாள...