திணை, பால், எண், இடம் பற்றி அறிதல்
திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் திணை திணை - ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். * திணை இரண்டு வகைப்படும் . அவை உயர்திணை, அஃறிணை உயர்திணை: உயர்ந்த ஒழுக்கமுடைய ஆறறிவுடைய மக்களைக் குறிப்பது உயர்திணை எனப்படும். தேவர், மக்கள், நரகர் உயர்திணையில் அடங்குவர். இவர்கள் மற்ற உயிர்களை விட நன்மை தீமைகளைப் பிரித்தறியும் ஆற்றல் நிறைந்தவர்கள். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" தொல் (சொல் - 1) "மக்கள் தேவர் நரகர் உயர்திணை, மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" - நன்னூல் (261) அஃறிணை : அல் + திணை = அஃறிணை. உயர்வு அல்லாத ஒழுக்கம் உடையவை என்று பொருள். தேவர், நரகர், மக்கள் அல்லாத மற்றைய உயிருள்ளவை, உயிரில்லாத பொருள்கள் அனைத்தும்...