Posts

Showing posts from March, 2023

நாலடியார் சுற்றம் தழால்

                              நாலடியார்  21. சுற்றம் தழால் பாடல் 201 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். கருவுற்றதனால் அதுபற்றி வரும் கணக்கற்ற நோவும் மசக்கையும் குழந்தை பெறுங்காலத்தய நோவும் கண்ணால் தம்மடியில் குழந்தையைக் கண்ட தாய் மறப்பதுபோல் தாம் கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம் கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும். பாடல் 202 அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். வெப்பம் மிகு கோடையில் வந்தடைந்தோருக்கெல்லாம் நிழல்தரும் மரம்போல் தம்மை நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம் தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து தான் வருந்தி உழைத்து பழுத்தமரம் போல் பலரும் பயன்நுகர வாழ்வதே நல்ல ஆண்மகனின் கடமையாம். பாடல் 203 அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னார்பெரியோர் ; –  அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்ப...

முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு-           முல்லைப்பாட்டு -நப்பூதனார்   முன்னுரை பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் முல்லைப்பாட்டு: கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம்: நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல, பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி             பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, (1 - 6) காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள்அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் ...