அகநானூறு 34 புலத்தி துவைத்த ஆடை போல் தூய நிறம் கொண்ட அன்னம் சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 5 மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் ஆ பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, செல்க, தேரே நல் வலம் பெறுந! 10 இ பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி துறை விட்டன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, ''இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து'' என, 15 இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் பாடல் கிளியைத் தூது விடுவாள். இன்று திரும்புமாறு சொல் என்பாள். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். வலவ, விரைந்து தேரை ஓட்டுக என்கிறான், பொருளீட்டித் திரும்பும் தலைவன். –...
Posts
Showing posts from February, 2024