நாலடியார் 21. சுற்றம் தழால் பாடல் 201 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். கருவுற்றதனால் அதுபற்றி வரும் கணக்கற்ற நோவும் மசக்கையும் குழந்தை பெறுங்காலத்தய நோவும் கண்ணால் தம்மடியில் குழந்தையைக் கண்ட தாய் மறப்பதுபோல் தாம் கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம் கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும். பாடல் 202 அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். வெப்பம் மிகு கோடையில் வந்தடைந்தோருக்கெல்லாம் நிழல்தரும் மரம்போல் தம்மை நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம் தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து தான் வருந்தி உழைத்து பழுத்தமரம் போல் பலரும் பயன்நுகர வாழ்வதே நல்ல ஆண்மகனின் கடமையாம். பாடல் 203 அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னார்பெரியோர் ; – அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்ப...
நாச்சியார் திருமொழி நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம். 556: வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 கல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே! 557: நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்...
பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடி வருமோ கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே (40) நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அனைத்தையும் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர் நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல் நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே பாரிற் பல உயிர்களைப் படைத்த வந்தனைப் பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே (64) நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நி...
Comments
Post a Comment