மகாகவி பாரதியாரின் இலக்கியப்பணி
மகாகவி பாரதியாரின் இலக்கியப்பணி
முன்னுரை
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழன்னையின் தவப்புதல்வராய்
எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ல் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னச்சாமி ஐயர், இலட்சுமி அம்மாள் ஆவார். இவர் தனது பதினோராவது வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றுத் திகழ்ந்தார். இவர் நாட்டுப்பற்று மிக்கவராகவும், மொழிப்பற்று மிக்க கவிஞராகவும் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டுவதில் அளப்பரிய பங்காற்றியவராகவும் விளங்கினார். "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று முழங்கினார். கவிஞன் என்றால் எங்கோ கற்பனை உலகில் உலவிக் கொண்டு மக்களினத் தொடர்பற்று வாழ்பவன் என்பதை மாற்றி நாடு, மொழி, இனம் ஆகிய மூன்று துறைகளிலும் அருந்தொண்டாற்றியவர் பாரதியார். இவரது கவிப்புலத் திறமையை கண்ட எட்டைய புரத்து மன்னன் “கலைமகள்” எனும் பொருள் தரும் பாரதி" எனும் பட்டத்தை வழங்கினார். இவரின் படைப்புகளாக பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு ஆகியவை சிறந்து விளங்கின. இவரை முண்டாசுக் கவிஞன், சுப்பையா, மகாகவி, சக்திதாசன், பாரதி என சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர். இவர் எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும், விடுதலை வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் விடுதலைக்காக அரும்பாடுபடுபவராகவும் திகழ்ந்து விளங்கினார். இந்தியாவிலேயே மாநில அரசால் 1949ல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதியார் இயற்றிய நூல்கள்:
பக்திப் பாடல்கள், விடுதலைப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, சந்திரிகையின் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், சின்னஞ்சிறு கிளியே, புதிய ஆத்திசூடி, பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி, பொன்வால்நரி, ஞானரதம் வசன கவிதை ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். மேலும் தமழில் உரைநடை காவியமான "ஞானரதம்" எனும் நூலையும் தராசு, மாதர் , கலைகள் போனற உரைநடை நூல்களையும் இயற்றி உள்ளார்.
சிறு கதைகள்:
ஸ்வர்ணகுமாரி, ஆறில் ஒரு பங்கு, சின்ன சங்கரன் கதை, பூலோக ரம்பை, திண்டிம சாஸ்திரி, கதைக்கொத்து எனும் சிறுகதைத் தொகுப்பையும் நவந்திரக் கதைகள், "ஜெக சித்திரம் எனும் நாடக நூலையும் எழுதி உள்ளார்.
பன்மொழிப் புலமை
பாரதியார் தனது 14-வது வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடினார். பின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சம ஸ்கிருதமும், இந்தியும் கற்றார். மேலும் ஆங்கிலம், வங்காளம் , பிரெஞ்ச் ஆகிய பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
இலக்கியப் பணி:
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதியையே சாரும். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடி தமிழுக்கு பெருமை சேர்த்தார். 1912ல் பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். பத்திரிக்கைகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டினார். இவரின் பாடல்கள் அடிமைப்பட்டுக் கிடந்த சுதேச மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவரின் எழுத்துக்கள் 1903ல் அச்சடித்து வெளியாகத் தொடங்கின.
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிடை
பொந்திடை வைத்தேன் வெந்து
தனித்தது காடு தழல் வீரத்தில்
மூப்பென்றும் குஞ்சென்றும்
உண்டோ எனப் பாடினார்
பெண் விடுதலை:
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் ஆனாதிக்கம் மேலோங்கி பெண்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்ந்த காலகட்டத்தில் பெண் விடுதலைக்கு பாடுபட்டவர் பாரதி.
"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாடியும், புதுமைப் பெண், பெண் விடுதலை, பெண்மை, பெண்கள் விடுதலைக் கும்மி என்பன போன்ற பல பெண்ணியச் சிந்தனை மிக்க பாடல்களைப் பாடியுள்ளார்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம்”
என்று பாடியும் ஆண் பெண் சரிநிகர் சமானத்தை வலியுறுத்தினார். மாதர் என்ற புத்தகத்தில் பெண் அடிமைத்தன விடுதலைப் பற்றி பாரதி கூறாத சொற்களே இல்லை எனலாம்.
சுதந்திரப் பயிர்:
"தண்ணீர் விட்டோ
'வளர்த்தோம்? சர்வேசா
இப்பயிரை கண்ணீரால்
காத்தோம்
கருகத் திருவுளமோ"
எனப்பாடி சுதந்திரம் என்ற பயிர் பலருடைய கண்ணீரால் வளர்ந்தது என்பதை வலியுறுத்தினார். நாட்டில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாக இருந்தவர் பாரதி.
"சுதந்திரம் எனது பிறப்புரிமை "
அதை அடைந்தே திருவோம்" என வீர முழுக்கமிட்ட பால கங்காதர திலகர் பாரதியின் உள்ளம் கவர்ந்தவர்.
பாரதி என்ற மகா கவிஞன் தான் வாழ்ந்த காலத்தில் தமிழையும் தன் தேசத்து மக்களையும் நேசித்து, பகுத்தறிவினை வளர்த்து இருண்டு கிடந்த மக்கள் வாழ்வில் தன் எழுத்துக்களால், வெளிச்சம் கொடுத்து இனி ஒரு விதி செய்வோம் என்று பாடிய புதுமை கவிஞன் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கவிஞன் என்றால் அது மிகையாகாது.
எட்டையபுரத்திலும் சென்னையிலும் பாரதி வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு உள்ளது. பாரதி காட்டிய வழியில் நாமும் தமிழையும் நம் சமூகத்தையும் வழி நடத்திச் செல்வதே அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.
Comments
Post a Comment