அகிலன்
1. முதல் லட்சியம்
( அகிலன் )
மாலை ஐந்து மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்துவிட்டது. ராமையாவின் கீழ் வேலை செய்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள், கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள் அவர்கள். ராமையாவின் வேலை இன்னும் முடியவில்லை; 'பைல்'கள் பாக்கியிருந்தன.
அவசர வேலைகளை மட்டும் அவர் பார்த்து முடிப்பதற்குள் ஏழு மணியாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரம் தங்கினால் ஒரு வழியாக எல்லாவற்றையுமே முடித்து விடலாம். ஆனால் அவருடைய உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. வயதின் தளர்ச்சி அவரைக் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வருடம் போனால் அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும். 'ஓய்வு பெறும் கடைசி நாள் வரையிலும் உற்சாகமாக உழைத்துத் தீரவேண்டும்' என்ற பிடிவாதம் உள்ளவர் அவர்.
அந்தப் பிடிவாதம்தான் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வந்த அவரை, இன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. முறையாகத் தமக்கு வரவேண்டிய ஊதியத்தைத் தவிர, மேல் வரும்படியாகவோ, லஞ்சமாகவோ, அன்பளிப்பாகவோ அவர் அரைக் காசு பெற்றதில்லை. அந்த விஷயத்தில் அவர் பிழைக்கத் தெரியாதவர்.
வழுக்கைத் தலை; கருப்பு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி; சதுரமான முகம்; அரைக்கை ஸ்லாக்; டெரிலின் பேண்ட்; கையில் ஒரு பிரீப்கேஸ், நடுத்தர உயரம் - இவர்தாம் ராமையா.
நகரப் பேருந்துக்காகக் காத்து நின்றார் ராமையா. இரவு ஏழு மணியான பிறகும் அங்கே கூட்டத்துக்குக் குறைவில்லை. பஸ் வந்து நின்றது. ஏற்கெனவே அதில் நெரிசல் அதிகம். கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. அவசரக்கா ர்களை முன்னே போகவிட்டு, கடைசியாகத் தாமும் ஏறிக்கொண்டு ஒரு கம்பியைப் பற்றினார். பஸ்சில் பயணம் செய்த அந்தப் பதினைந்து நிமிஷங்களும் நரகவேதனைதான். காலையில் அலுவலகத்துக்கு வருவது அதைவிடக் கொடுமை.
வாடகைக் காரில் அவர் அலுவலகத்துக்குப் போய் வரலாம். அல்லது மலிவான விலையில் ஒரு பழைய காரைக்கூட அவர் சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். ராமையாவுக்குக் கார் ஓட்டத் தெரியும்.
எதையும் அவர் செய்யவில்லை. கார் வாங்காமல் இருந்ததால் பெண்களுடைய கல்யாணத்தைக் காலாகாலத்தில் முடித்தார். பிள்ளைகளை முடிந்த வரையில் படிக்க வைக்க முயன்றார். வைக்கவில்லை. வீட்டில் காய்கறிக்கும் பாலுக்கும் பஞ்சம்
ஆனாலும் பேருந்துப் பயணம் ஒவ்வொரு முறையும் அவருக்கு எரிச்சலூட்டும் அனுபவமாய்த்தான் இருந்தது. ஐம்பத்து நாலு வயதான ராமையா பேருந்துக்குள் நுழைந்தார். அவர் வெளியே வரும்போது எழுபத்துநாலு வயதுக்காரராகக் குதறி எறியப்பட்டார். "இதற்கெல்லாம் எரிச்சல் பட்டால் குடும்பத்தைக் முடியுமா என்ன?* டத்தேற்ற கடை
பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து வீட்டுக்குச் சோர்வோடு நடந்தார் அவர். காலை வேளைகளில் தென்படும் மிடுக்கை அவரிடம் மாலை வேளைகளில் காண முடியாது. அலுவலகத்தின் பைல்களில் உள்ள பிரச்சனைகளோடு அவர் ஒவ்வொரு நாளும் போராடித் தீர வேண்டும்.
அரசாங்கக் குடியிருப்புப் பகுதியில், இரண்டாவது மாடியில் அவர் குடியிருந்தார். படிகளில் ஏறி அவர் மாடிக்குச் சென்றபோது, அங்கே வராந்தாவில் அவர் மூத்த மகன் குமார் தன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
குமாரின் நண்பர்கள் பலதரப்பட்டவர்கள் படித்து விட்டு வேலையில்லாதோர், ஒரே படிப்புக்கு மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோர், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் படிப்பால் பலனில்லை என்று தீவிர வாதம் பேசுவோர்.. இப்படி ஒரு கதம்பக் கூட்டம். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இளைய தலைமுறை.
குமாரும் பி.எஸ்ஸி.யில் கணக்கைக் கோட்டை விட்டு விட்டான். மறு படையெடுப்பு நடத்திக் கோட்டையை மும்முரமாகக் கைப்பற்ற வேண்டிய சமயம் இது. அடுத்த தேர்வுக்கான அக்டோபர் மாதம் நெருங்கிவிட்டது. ஆனால், அவனோ தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து இந்த உலகத்தைபே கடைத்தேற்றுவதற்கான சீரிய சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறான்! வராதாவில் கூடியுள்ள ஐந்தாறு இளைஞர்களும் இந்தச் சமூக அமைப்பின் கோள றுகளை அலசி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது வாழ்வில் லஞ்ஈய், ஊழல், வஞ்சகம், ஏமாற்று வித்தைகள்...
ராமையா உள்ளே சென்று உடை மாற்றிக்கொண்டார். இடு ப்புக்கு ஒரு வேட்டி; மேலே ஒரு துண்டு; குளியல் அறைக்குள் புகுந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு வெளியில் வந்தார். சமையல்கட்டில் இட்டிலிகளும் பாலும் தயாராக இருந்தன. ஐந்தே நிமிடங்களில் இரவு சாப்பாடு முடிந்தது. தம்முடைய அறைக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் விழுந்தார்.
பையன்களுடைய பேச்சில் எதிர்வீட்டு மன்னார்சாமியின் பெயர் அடிக்கடி பத்தோடு வந்து விழுந்தது.
இந்தச் சமூக அமைப்பிலே மன்னார்சாமிதான் குபேரனாக முடியும்" என்றான் த்திரத்தோடு ஒருவன்.
யாமையா தமக்குள் நகைத்துக் கொண்டார். அந்தப் பையன் பேசியதை ன்றிலும் அப்படியே மறுத்துவிட முடியாது. ஆனால் அதே சமயம் அங்குக் டியிருந்த பிள்ளைகளில் யாருமே குசேலர் வீட்டுப் பிள்ளைகளாகவும் இல்லை. தம் ஆயிரமோ ஈராயிரமோ வருமானம் வரக்கூடிய வீடுகளின் செல்லப் ள்ளைகள், பணக் கஷ்டம் என்றால் என்ன? என்று தெரியாமல் க்கப்பட்டவர்கள். 'சாமான்ய'ரான எதிர் வீட்டு மன்னார்சாமியின் வாக்குப்படி மட்டுக்குடி மக்கள்',
எதிர் வீட்டுச் சாமான்யருக்கு இப்போது'பத்து லட்சமோ பதினைந்து லட்சமோ ஆறும் என்று அக்கம் பக்கத்தார் பேசிக்கொண்டார்கள். பத்தாண்டுகளுக்கு ன்பு வரை அவர் தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் சைக்கிள் கடையிலோ கடையிலோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். கள்ளச் சாராயத்திலும் வருக்குத் தொடர்பு இருந்ததாக ஒரு வதந்தி. ஊரைச் சுற்றிப் பலரிடம் கடன் ங்கியிருந்தாராம்.
அவர் எப்படியோ சென்னைக்கு வந்து ஒரு திடீர்ப் பிரமுகராகி விட்டார். வருக்கென்று இங்கே ஒரு தொழில் இல்லை. வியாபாரம் இல்லை. படிப்பும் ழைப்பும் அவரிடம் கிடையாது. அவரைப் போலவே வளர்ந்துவிட்ட அவருடைய ளை மோகனசுந்தரத்துக்கு, வைர மோதிரம் போட்டுக்கொள்ளக் கைகளில் து விரல்கள் போதவில்லை. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ர்ஒன்றை, அவன் அப்பாவின் தயவுக்காக யாரோ அவனுக்கு அன்பளிப்பாக ழங்கினார்களாம். அதை எடுத்துக்கொண்டு போய் நகரத்தின் சந்து பாந்துகளையெல்லாம் அலற அடித்துவிட்டுத் திரும்பினான் அவன்.
"ஒங்கப்பாவும் எங்கப்பாவும் முப்பது வருஷங்களாய்ப் பாடுபட்டு ழைக்கிறாங்க. பேரும் பெரிய பேரு, கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள். டியிருக்கிறதுக்கு இன்னும் சொந்தமாக ஒரு வீடு கடடிக்க முடியலே. இவன் ண்டு பங்களாவை வாங்கி, மாசம் ஆறாயிரத்துக்கு வாடகைக்கு ட்டிருக்கிறானாம்" என்றான் ஒருவன்.
"அவன் லஞ்சம் வாங்கறான், குடிக்கிறான், வச்சுக்கறான். அது ஒண்ணுதான் அவனோட உத்தியோகம்! உங்கப்பாவும், எங்கப்பாவும் உத்தியோகம் மட்டும்தானே ார்க்கிறாங்க?" - இது குமாரின் குரல்.
மன்னார்சாமி ஒரு முறை தம்மிடம் வந்து மோதிய காட்சியை ராமையா னைத்துக் கொண்டார். அவருக்கு மேலிடத்தில் சிபாரிசு செய்து உத்தியோக உயர்வு வாங்கித் தருவதாக ஆசை காட்டி விட்டு, பதிலுக்குத் தமாசு ஒரு தர்மசங்கடமான காரியத்தைச் செய்யும்படி வற்புறுத்தினார். ராமையா மறுத்துவிட்டார். வெளியூருக்கு மாற்றி விடுவதாகப் பயமுறுத்தினார். பதினோரு ஊருக்குப் போயிட்டு வந்திட்டேன்; இன்னும் போனாப் பன்னெண்டாவது ஊர் என்றார் ராமையா. அதன் பிறகு மன்னார்சாமி ராமையாவிடம் வருவதில்லை
மணி பத்தடித்தது. அப்போதுதான் வராந்தாவில் கூடியிருந்த கூட்டம் கலைந்தது குமாரைப் பற்றியும் அவன் தம்பிகளைப் பற்றியும் தான் அவருக்குக் கபடை காலா காலத்தில் படித்துத் தேறியிருந்தால் இதற்குள் குமார் எங்காவது ஓரிடத்தில் வேலை பார்த்துச் சம்பாதிக்கத் தொடங்கியிருப்பான். அவனைப் பின்பற்றி அவன் தம்பிகளும் மும்முரமாகப் படிப்பில் ஈடுபட்டிருப்பார்கள்.
சிறு பிராயத்திலிருந்தே அவர்களை இன்னும் சற்று ஒழுங்கோடும் கட்டுப்பாட்டுடனும் வளர்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது ராமையாவுக்கு. முப்பத்து நாலு வயதில் செய்திருக்க வேண்டிய வேலையைப் பற்றி ஐம்பத்திநாலில் நினைத்து என்ன பயன்?
ஒரே சமயத்தில் இரண்டு பக்கமும் எரிந்து வரும் மெழுகுவர்த்தி அவர். ஒருக பக்கம் காலமெல்லாம் ஆபீஸ் வேலை; மறுபக்கம் காலமெல்லாம் படிப்பு. இப்படி தனி இவர் உழைத்து முன்னுக்கு வந்திருக்காவிட்டால், எழுத்தராக வேலையைத் தொடங்கி எழுத்தராகவே ஓய்வு பெற்றிருக்க வேண்டியதுதான்.
அவருக்குப் பதினாறு வயதில் அவர் அப்பா அவரை விட்டுவிட்டுக் கண்களை மூடினார். சொத்தோ சுகமோ இல்லை. அப்பா வாங்கிய கடனுக்கு மட்டுமே ராமையா வாரிசானார். பதினெட்டாவது வயதில் அவரால் 'இண்டர்' படிப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்தது. மேலே படிக்கப் பணமில்லை. சேர்ந்துவிட்டார். வேலையில்
'நான் ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையின் மகன்; பதினாறு வயதிலே தெருவில் விடப்பட்டவன். இளமைக் காலத்து வறுமையே வாழ்க்கையில் என்னைப் போராடத் தூண்டியிருக்க வேண்டும். என் பிள்ளைகள்?. .. வறுமை ஒன்றுதான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான தூண்டுதலைத் தர வேண்டுமா என்ன?"
காலையில் குமாரை அழைத்து வைத்து அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தார் ராமையா, மார்ச் தேர்வில் வெற்றி பெறவில்லை. அக்டோபர் நெருங்கிவிட்டது. இந்நிலையில் எப்படி இவனால் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு வீண் பொழுது போக்க முடிகிறது? இவனைப் போல் இவன் தம்பிகளும் நடந்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம்?...
எப்படியோ உறக்கம் வந்து கண்களை மூடினார் ராமையா. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் தெருவில் ஏதோ பரபரப்பான ஒலிகள் கேட்டன. போலீஸார் விசில்களை ஊதிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தார்கள்.
சில ஜீப்புகளும் வந்து நின்றன. படுக்கையில் இருந்து குதித்து எழுந்தார் ராமையா.மாடியோரத்துக்குச் சென்று அங்கிருந்த இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு கீழே பார்த்தார். அதற்குள் குமாரும் அவருக்கு அருகில் வந்து நின்று கொண்டான். அக்கம் பக்கத்து மாடிகளிலும் தலைகள் தெரிந்தன.
'மக்கள் ஊழியர்' மன்னார்சாமியின் வீட்டுக்கு முன்னால்தான் இந்த ஆர்ப்பாட்டம் போலீஸார் சிலர் கதவைத் தட்டி உள்ளே புகுந்தனர். அவர்களுக்குப் பின்னால் சில அதிகாரிகளும் நுழைந்தார்கள். வீட்டுக்குள் சிறிது நேரம் சோதனைகள் நடைபெற்றிருக்க வேண்டும். மன்னார்சாமி தலையைத் தொங்கவிட்டுக் கொண்டே போலீஸார் புடைசூழ வெளியில் வந்தார்.
அவருடைய மகன் மோகனசுந்தரம் அளவுக்கு மீறி ஆத்திரம் அடைந்தவனாகக் காணப்பட்டான். மட்டுமரியாதை சிறிதுமின்றி அங்கு வந்தவர்களை வாயில் வந்தபடித் தூற்றலானான். பொறுமையாக இருக்கும்படி அவனை ஓர் அதிகாரி. கையமர்த்திப் பார்த்தார். அவன் கேட்கவில்லை. பத்து விரல் வைர மோதிரங்களும் விளக்கொளியில் பளிச் பளிச்சென்று டாலடிக்க அவன் தன் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினான். அவ்வளவுதான்! பளீர் பளீரென அவன் கன்னங்களில் மாறி மாறி அறைகள் விழுந்தன... விழுந்து கொண்டேயிருந்தன. ம் தள்ளாடித் தடுமாறிக் கீழே விழுந்தான் அவன்.
மன்னார்சாமியை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸார் அங்கிருந்து திரும்பினார்கள்.
அருகருகே நின்றபடி ராமையாவும் குமாரும் ஒருவரையொருவர் ஒருகணம் மௌனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
"நீயும் உன்னோட சிநேகிதர்களும் சேர்ந்து அடிக்கடி தீவிரமாப் பேசறாப்பலேதான் மன்னார்சாமியும் அவரோட இளமைக்காலத்தில் பேசியிருப்பார்" என்றார் ராமையா. குமாருக்குத் தூக்கி வாரிப்போட்டது தன் தந்தையின் முகத்தை ஏறிட்டுப்
பார்த்தான்,
*உயர்ந்த சாதிக்காரன், பணக்காரன், மேட்டுக்குடி மகன் இவனுக்கு எதிராகவெல்லாம் இவர் ஒரு காலத்திலே கொடிபிடிச்ச ஆள்தான், ஆனால், அத்தோட தனக்குன்னு நாணயமாப் பிழைக்கறதுக்கு ஒரு தொழிலோ சிறு வியாபாரமோ செய்து இவர் பணம் சம்பாதித்திருக்கலாம். அதை முதல்லே செய்திட்டு, குடும்பத்துக்கு உழைக்க வேண்டியதை உழைச்சிட்டு, பிறகு ஊருக்கு உழைக்கப்புறப்பட்டிருக்கலாம்."
தகப்பனார் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவன் போல், 'நீங்க என்ன சொல்றீங்க?' என்று விழிகளாலேயே கேட்டான் குமார்.
இந்த உலகத்திலே நாணயமாகப் பிழைக்கிறதுக்கு ரெண்டே ரெண்டு வழிதான் இருக்கு. ஒண்ணு, சொந்தமா ஒரு தொழிலோ வியாபாரமோ செய்து பிழைக்கணும் .இல்லே, உத்யோகத்துக்கோ வேலைக்கோ போய் மாசச் சம்பளம் வாங்கிப் பிழைக்கணும். இதை ஒருத்தன் முதலிலே கவனிக்காமல், சமூகத்தைச் சீர்திருத்தப்போனால், மன்னார்சாமி மாதிரி மாறும் நிலைதான் வரும்."
"அப்படின்னா?. . ." குமார் இழுத்தான்.
"நீயும் உன்னோட சிநேகிதர்களும் சேர்ந்து தீவிரவாதம் பேசறது ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்லே நீங்க செய்ய வேண்டிய வேலை உங்க படிப்பு. அதை நோக்கித்தான் உங்க கவனமும் உழைப்பும் திரும்பியிருக்கணும். சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு, அவனவன் வேலையைத் தேடிக்கிட்டு, உழைச்சு முன்னுக்கு வரப் பாருங்க. அவனவன் தன்னோட சொந்தக் காலிலே நிற்கப் பாருங்க."
அவன்
'சரிப்பா.'
"சரின்னு சொன்னாப் பத்தாது; செயல்லே காட்டணும். நான் ரிடையராகற வரையிலே உங்களுக்காக என்னாலே செலவு பண்ண முடியும். குமார் பதில் அளிக்கவில்லை. - அப்புறம்?"
குமார் பதிலளிக்கவில்லை.
"ஊர் விவகாரம், அரசியல், சினிமா இதைப் பத்தியெல்லாம் பேசி நேரத்தைக் பள்ளிக்க கொலை செய்யறாப்பலே, தீவிரமான லட்சியம் பேசறதும் ஒரு நேரக் கொலைதான். குழந்தை கிடைக்கிற நேரத்தைக் காப்பாத்தி, எதுக்கு முன்னால் பயன்படுத்தணுமோ அனுபவ அதுக்குப் பயன்படுத்தப் பார். இப்போதைக்கு உன்னோட முதல் லட்சியம் இதுதான்".
சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்ட உணர்வோடு, தம்முடைய அடுத்த நடக்கு வேலைகளைக் கவனிப்பதற்கு உள்ளே சென்றார் ராமையா குமார் சிந்திக்கலானான்.
Comments
Post a Comment