பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடி வருமோ கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே (40) நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அனைத்தையும் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர் நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல் நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே பாரிற் பல உயிர்களைப் படைத்த வந்தனைப் பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே (64) நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நி...