Posts

  அகநானூறு 34 புலத்தி துவைத்த ஆடை போல் தூய நிறம் கொண்ட அன்னம் சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 5 மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் ஆ பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, செல்க, தேரே நல் வலம் பெறுந! 10 இ பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி துறை விட்டன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, ''இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து'' என, 15 இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் பாடல் கிளியைத் தூது விடுவாள். இன்று திரும்புமாறு சொல் என்பாள். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். வலவ, விரைந்து தேரை ஓட்டுக என்கிறான், பொருளீட்டித் திரும்பும் தலைவன். –...

அகநானூறு - பாடல் 34. 

அகநானூறு - பாடல் 34.  முல்லைத் திணை  பாடியவர் - மதுரை மருதன் இள நாகனார் துறை - வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்கிறது. சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும்                                                                          புதல்  கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் தொடுதோல் கானவன் கவை பொறுத்து                                                                            அன்ன  இரு திரி மருப்பின் அண்ணல் இரலை 5 செறி இலைப் பதவின் செம் கோல் மென்                                          ...
  கலித்தொகை 51 – குறிஞ்சிக் கலி 15 - தலைவி கூற்று பாடியவர் – கபிலர் திணை - குறிஞ்சி சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில்நாம்ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!           5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,              10 அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா...

கலித்தொகை

  கலித்தொகை பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடல் எண் -       2 தலைவி ஆற்றாமை கூறி, செலவு அழுங்குவித்தது. 1   வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக், கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக், களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா, முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம் குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம் இறத்திரால்,  விளக்கவுரை : 1 வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாள...

பூசலார் நாயனார் புராணம்

                                                              பூசலார் நாயனார் புராணம் "மன்னிய சீர் மறைநாவல்  நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்" அவதார தலம் - திருநின்றவூர் முக்திதலம்      -  திருநின்றவூர் குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி , அனுஷம் 05-11-13 செவ்வாய்க்கிழமை   ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார்.  பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம்...

பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்

  பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார்.        நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்     நடுவன் வரும்பொழுது நாடி வருமோ     கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ     கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே (40)        நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அனைத்தையும் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர் நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல் நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே பாரிற் பல உயிர்களைப் படைத்த வந்தனைப் பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே (64) நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நி...
               சிவவாக்கியம் - சிவவக்கியார்  சரியை விளக்கம் : ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. 4   அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய்விட்டது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியைப் பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே. அறிவு நிலை  மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய் ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரு மறிந்...