Posts

Showing posts from January, 2023

பாதுகை

 பாதுகை பாதுகை ( பிரபஞ்சன் ) இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பது போல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கருப்பு மின்னல் மாதிரி அவைகள் ஒளிர்ந்தன. பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் குழந்தைகளைப் பார்த்தான். கருப்பு இரட்டைக் குழந்தைகள். வெள்ளைக்காரத் தெருவில் துரைமார்களுக்கு மட்டுமே பாதுகைகள் செய்யும் மாடன் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் செய்திருந்தான் அவைகளை. விலை கொஞ்சம் கூடுதல்தான். அதற்கென்ன செய்ய முடியும். துரைமார்கள் கொடுக்கிற கூலியைத்தானே தானும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். ரொம்ப நாள் ஆசை அன்று நிறை வேறியது பொன்னுத்தம்பிக்கு. துரைமார்களைப் போலவே படித்து அவர்களோடேயே தொழிலும் செய்கிறவன். அவர்களைப் போலவும் உடுத்த வேண்டாமா என்ன? கஞ்சி முடமுடப்பில் நிமிர்ந்து, கத்தி மாதிரி நின்ற கால்சராய்களின் மடிப்பு பழுதுபடா வண்ணம் வாகாக உட்கார்ந்து கொண்டு, மேஜோடுகளை எடுத்தான். மேஜோடுகளும் புதிதுதான். பாம்பு உரித்த சட்டை மாதிரி, மெருகும் மென்மையுமாய்...

தேவதை

 தேவதை 4. தேவதை (உத்தமச் சோழன் ) ஒரு பந்தயக் குதிரையின் மினுமினுப்போடும் வேகத்தோடும் தன்னை வழி மறித்தவர்களையெல்லாம் சர்வ அலட்சியமாய்ப் புறந்தள்ளி ஓடிக்கொண்டிருந்த அந்தப் புத்தம் புது பேருந்து தூரத்தே பார்க்கும்போது ஒரு ரோஜாப்பூ போலவும். அருகில் நெருங்கியதும் ஒரு தேவதையைப் போலவும் சாலை ஓரத்தில் தனியாய் நின்றிருந்த அவளின் விரலசைவுக்குக் கட்டுப்பட்டு சட்டென்று நின்றது. அந்த அவசர நிறுத்தத்தினால் பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ள, உட்கார்ந்திருந்தவர்களோ தங்கள் எதிர் சீட்டுகளில் முட்டிக்கொள்ள, அதனால் எழுந்த வேதனை கோபமாய் உருமாறி, என்ன 'டிரைவரய்யா இவர்' என்று அனைவரும் ஒட்டுமொத்த இரைச்சலுடன் ஒட்டுநரைப் பார்க்க, அவருக்கு அருகில் இருந்த படிக்கட்டு வழியே ரொம்பவும் நிதானமாய் அந்த அழகு தேவதை ஏறிக்கொண்டிருந்தது. ஏறி வந்த அழகின் வீச்சில் ஆண்களின் கோபமெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக, பெண்களின் கோபமோ கையாலாகாத பொறுமையாய் மறுபிறப்பெடுத்தது. பேருந்துக்குள் ஏற்கனவே நெருக்கமாய் நின்றிருந்தவர்கள் தங்களை மேலும் நெருங்கிக் கொண்டு அவளுக்குத் தாராளமாய்ப் பாதை போட்ட...

அசோகமித்திரன்

 அசோகமித்திரன் 3.குருவிக்கூடு ( அசோகமித்திரன் ) "பாலு, மாடிக்குப் போய் ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக் கொண்டு வா" என்று அம்மா சொன்னாள். அன்று சரஸ்வதி பூஜை. அந்த வீட்டில் ஹார் மோனியப் பெட்டி மீது புத்தகங்களை அடுக்கி வைத்துத்தான் பூசை செய்வது. பாலு மாடிக்குச் சென்றான். மாடியில் ஹார்மோனியம் ஒரு கள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டு, அக் கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பிரம்புத் தொட்டிலுள் வைக்கப்பட்டு, அத்தொட்டில் பரண்மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. பாலு நாற்காலி மீது ஒரு ஸ்டூலைப் போட்டுக்கொண்டு ஏறி பரணை எட்டிப் பார்த்தான். கரப்பான், பாச்சை, எலிப் புழுக்கை எல்லா நாற்றமும் வீசியது. கைபட்ட இடத்திலெல்லாம் எத்தனையோ நாட்களாகப் படிந்திருந்த தூசி கலைந்து மேல் கிளம்பி மூச்சையடைத்தது. தொட்டிலை ஒரு முறை அசைத்த பாலு சட்டென்று தன் கையைப் பின்னிழுத்துக் கொண்டான். தொட்டிலுள் வைக்கப்பட்டிருந்த ஹார்மோனியப் பெட்டிக்கும் தொட்டிலின் ஒரு பக்க விளிம்புக்கும் உள்ள இடைவெளியில் ஒரு குருவிக் கூடு இருந்தது. எதையும் தொடாமல் பாலு எம்பி எட்டிப் பார்த்தான். அக் குருவிக் கூட்டினுள் இரண்டு முட்டைகள் இருந்தன. ""ஏன்...

கி.வா ஜெகநாதன்

 கி.வா ஜெகநாதன் 2.மிட்டாய்க்காரன் (கி.வா.ஜெகந்நாதன்) அவன் ஒரு வியாபாரி. அவனுடைய வியாபாரம், விளம்பரம் எல்லாம் தனி மாதிரி. பிறர் கையை எதிர்பார்த்துப் பிழைக்கிறவன் அல்ல அவன். தானே உழைத்து வியாபாரம் செய்து சம்பாதிப்பவன். அவனுக்கு உதவியாள் தேவையே இல்லை. முனிசாமியைத்தான் சொல்லுகிறேன்; அந்த மிட்டாய்க்கார முனிசாமி உலகத்து எதிர்காலப் பிரஜைகளாகிய குழந்தைகளே அவனுடைய வாடிக்கைக்காரர்கள். மிட்டாய்ப் பாட்டைக் பாடிக்கொண்டு போகும்போது அந்த ராகற இளம்பரம் எவ்வளவு குழந்தைகளைக் கவர்ந்துவிடுகிறது!. பள்ளிக்கூடங்களைப் பற்றிய விஷயங்கள் அவனுக்குத் தெரியும்; படிப்பைப் பற்றி அல்ல; சங்கரன் செட்டியார் தெருவில் மேற்கே பார்த்து இருக்கும் சிவப்புப் தைக் பள்ளிக்கூடத்தில் நூறு பிள்ளைகள் படிக்கிறார்கள்; அவர்களிலே பெண் தான். குழந்தைகளும் உண்டு என்று அவன் கணக்கு ஒப்பிப்பான். தன் சொந்த லுமோ அனுபவத்தில் அவன் உணர்ந்தது இந்தச் சமாசாரம். சரியாக ஒன்பது மணிக்குத் தன்னுடைய மிட்டாய்த் தட்டோடு பள்ளிக்கூடத்து வாசலில் வந்து நிற்பான். பத்தரை பதினொரு மணிவரையில் வியாபாரம் இத்த நடக்கும். அப்பால் கொஞ்சம் வெளி வியாபாரத்தைக் கவனிக்கப் பு...
 அகிலன் 1. முதல் லட்சியம் ( அகிலன் ) மாலை ஐந்து மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்துவிட்டது. ராமையாவின் கீழ் வேலை செய்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள், கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்பவர்கள் அவர்கள். ராமையாவின் வேலை இன்னும் முடியவில்லை; 'பைல்'கள் பாக்கியிருந்தன. அவசர வேலைகளை மட்டும் அவர் பார்த்து முடிப்பதற்குள் ஏழு மணியாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரம் தங்கினால் ஒரு வழியாக எல்லாவற்றையுமே முடித்து விடலாம். ஆனால் அவருடைய உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. வயதின் தளர்ச்சி அவரைக் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வருடம் போனால் அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும். 'ஓய்வு பெறும் கடைசி நாள் வரையிலும் உற்சாகமாக உழைத்துத் தீரவேண்டும்' என்ற பிடிவாதம் உள்ளவர் அவர். அந்தப் பிடிவாதம்தான் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வந்த அவரை, இன்று ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. முறையாகத் தமக்கு வரவேண்டிய ஊதியத்தைத் தவிர, மேல் வரும்படியாகவோ, லஞ்சமாகவோ, அன்பளிப்பாகவோ அவர் அரைக் காசு பெற்றதில்லை. அந்த விஷயத்தில் ...