Posts

Showing posts from October, 2022

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

  புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதை என்பது யாப்பு வடிவமின்றி அல்லது யாப்பு வடிவ மைப்பினின்றி முற்றிலும் மாறுபட்டு படைக்கப்படுவதே புதுக்கவிதை ஆகும்.. புதுக்கவிதைகள் மக்களின் அடிப்படை  மனவெழுச்சி உணர்வுகளான நேசம், காதல், மகிழ்ச்சி, அன்பு, பாசம், துக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு இவை அனைத்தையும் எளிய சொற்களால் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாலும், அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாகவும் புதுக்கவிதைகள் இயற்றப்படுகின்றன. மனித மனங்கள் மகிழ்வாள் நிரம்பி வழியும்   வகையில் படைக்கப்படுகிறது. புதுக்கவிதையின் தோற்றமும்vவளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.   தோற்றம் கி. பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறப்புப் பெற்றது. பாரதியாரால் இயற்றப்பட்ட   வசன கவிதைகளே' தமிழில் புதுக் கவிதைக்கு  முன்னோடியாக அமைந்தது எனில் மிகையன்று. 1910ம் ஆண்டு வால்ட் விட்மன்" எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய "புல் தழ்கள்' என்னும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். தொடர்ந்து அமெரிக்க நாட்டவரும் இங்கிலாந்தில் குடியேறியவருமாகிய  ஆகிய " ...
         👍 பிழையின்றி எழுதுவோம் 👍      "ணகர", " னகர", "லகர""ளகர","        ழகர"ச் சொற்களின் வேறுபாடு  1. ணகர, னகர பொருள் வேறுபாடு அண்ணம் - மேல்வாய் அன்னம் - பறவை மணம் - வாசைன மனம் - உள்ளம் பணி - தொழில் பனி - குளிர்    2, லகர, ளகர, ழகர வேறுபாடு அலை - கடல் அலை  அளை - குகை அழை - கூப்பிடுதல் ஆல் - ஆலமரம் ஆள் - நபர், தன்மனிதன் ஆழ் - மூழ்கு இலை - மரத்தின் இலை இளை - மெலிதல் இழை - நூல், செய் உலவு - நடமாடு உளவு - வேவு பார்த்தல் உழவு - பயிர்த்தொழில் ஒலி - சத்தம் ஒளி - வெளிச்சம் ஒழி - அழித்தல் வலி - வலிமை, வேதனை வளி - காற்று வழி - பாதை வால் -விலங்கின் உறுப்பு வாள் - கருவி வாழ் - உயிரோ...
பாரதிதாசனின் இலக்கியப் பணி  “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை உலகமெங்கும்  பரவச் செய்த பெருமைக்குரியவர். இக்கட்டுரையில் பாரதிதாசனின் இலக்கியப் பணி பற்றி ஆராயப்படுகிறது. பிறப்பு  பாரதிதாசன்  பாண்டிச்சேரியில் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்ப...

👍 பிழையின்றி எழுதுவோம் 👍

       👍 பிழையின்றி எழுதுவோம் 👍     ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு           01.. அரம்....................= ஒரு கருவி          02. அறம்...................= தருமம்          03. அரி.......................= அறுத்தல்          04. அறி......................= தெரிந்துகொள்          05. அரவு....................= பாம்பு          06. அறவு...................= நீக்கம்          07. அருகு..................= பக்கம்          08. அறுகு..................= அறுகம்புல்          09. அரை....................= பாதி          10. அறை....................= வீட்டின் அறை          11. அலரி....................= ஒருவகை பூ          12. அலறி...................= கதறி   ...

மகாகவி பாரதியாரின் இலக்கியப்பணி

  மகாகவி பாரதியாரின் இலக்கியப்பணி   முன்னுரை  மகாகவி  சுப்பிரமணிய பாரதியார் தமிழன்னையின் தவப்புதல்வராய்  எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ல் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னச்சாமி ஐயர், இலட்சுமி அம்மாள் ஆவார். இவர் தனது பதினோராவது வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றுத் திகழ்ந்தார்.  இவர் நாட்டுப்பற்று மிக்கவராகவும், மொழிப்பற்று மிக்க கவிஞராகவும் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டுவதில் அளப்பரிய பங்காற்றியவராகவும் விளங்கினார். " நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று முழங்கினார். கவிஞன் என்றால் எங்கோ கற்பனை உலகில்  உலவிக் கொண்டு மக்களினத் தொடர்பற்று வாழ்பவன் என்பதை மாற்றி நாடு, மொழி, இனம் ஆகிய மூன்று துறைகளிலும்  அருந்தொண்டாற்றியவர் பாரதியார். இவரது கவிப்புலத் திறமையை கண்ட எட்டைய புரத்து மன்னன் “ கலைமகள் ” எனும் பொருள் தரும் பாரதி" எனும் பட்டத்தை வழங்கினார். இவரின் படைப்புகளாக பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு ஆகியவை சிறந்து விளங்கின. இவரை முண்டாசுக் கவிஞன், சுப்பையா, மகாகவி, சக்திதாசன், பார...

பாரதியார் கவிதை – செந்தமிழ் நாடெனும் போதினிலே

  பாரதியார் கவிதை – செந்தமிழ் நாடெனும் போதினிலே   செந்தமிழ் பொருள் : சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளைத் தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகிறது. செந்தமிழ் நாடு- பாடல் செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத்தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ? செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே  மேலும் தமிழ்நாடு என்னுடைய மூதாதையரின் நாடு என்று எண்ணும்போது மனம் கொள்ளும் பெ...

பாரதிதாசன் தமிழ் வளர்ச்சி

  . பாரதிதாசன் தமிழ் வளர்ச்சி  எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்; இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வௌியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தௌிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை. தகத்தகா யத்தமிழைத் தாபிப்போம் வாரீர்